பதிவு செய்த நாள்
23 நவ2012
02:24
மும்பை: நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, 55.21 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. அதாவது, டாலர் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது. நேற்றைய முன்தின வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 55.37 ரூபாய் வரை வீழ்ச்சி கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011ம் ஆண்டு, ஜூன் மாதத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, 44 ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது, நடப்பாண்டு ஜூன் மாதத்தில், 55 ரூபாயாக மிகவும் சரிவடைந்து காணப்பட்டது. ஆக, தொடர்ந்து, டாலர் மதிப்பு உயர்ந்தும், ரூபாய் மதிப்பு சரிவடைந்தும் வருகிறது.வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு, டாலருக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது.இதையடுத்து, ரூபாய் மதிப்பு மேலும் சரிவடைய வாய்ப்புள்ளது என, அன்னியச் செலாவணி ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|