பதிவு செய்த நாள்
27 நவ2012
04:14
புதுடில்லி:
வேளாண் துறை உற்பத்தி சிறப்பான அளவில் உள்ளது. இருப்பினும், மக்கள் தொகை
பெருக்கம், இயற்கை வள ஆதாரங்கள் குன்றி வருவது உள்ளிட்ட பல நெருக்கடிகளில்,
இந்திய வேளாண் துறை சிக்கி தவித்து வருகிறது என, மத்திய வேளாண் துறை இணை
அமைச்சர் தாரிக் அன்வர் தெரிவித்தார்.
கடந்த 1951-52ம் நிதியாண்டில், நாட்டின் உணவு தானிய உற்பத்தி, 5.2 கோடி டன்
என்ற அளவில் இருந்தது. இது,மிக வேகமாக வளர்ச்சி கண்டு, சென்ற 2011-12ம்
நிதியாண்டில், 25.74 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
கடந்த, 20 ஆண்டுகளில், வேளாண் துறையில் குறிப்பிடத்தக்க அளவிற்கு
மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், மக்கள் தொகை அதிகரிப்பு, விலைவாசி
உயர்வு, விளை நிலங்கள் சுருங்கி வருவது போன்றவற்றால், இந்திய வேளாண் துறை
நெருக்கடி நிலைக்கு ஆளாகியுள்ளது.இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 1951ம்
ஆண்டில், 0.91 ஹெக்டேராக இருந்த, தனிநபர் நிலப் பயன்பாடு, சென்ற, 2001ம்
ஆண்டு, 0.32 ஹெக்டேராக சரிவைக் கண்டுள்ளது. இது, வரும் 2050ம் ஆண்டில்,
0.09 ஹெக்டேராக மிகவும் வீழ்ச்சி காணும்.வேளாண் துறையை பாதிக்கும் மற்றொரு
முக்கிய காரணியாக பருவ நிலை மாற்றம் உள்ளது. இது, பயிர்கள், பால் மற்றும்
மீன் உற்பத்தியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.இது போன்ற பல்வேறு
இடர்பாடு களை எதிர்கொள்ள, எதிர்கால உணவு தேவைகள், வாழ்வாதார பாதுகாப்பை
உறுதிபடுத்த, திட்டமிட்ட, முறையான ஆய்வுகள் மிகவும் அத்யாவசியமான ஒன்றாகும்
என, தாரிக் அன்வர் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|