தயாரிப்பு துறையில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேறும்தயாரிப்பு துறையில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் ... வளர்ச்சி பாதையில் இந்திய காபி ஏற்றுமதி வளர்ச்சி பாதையில் இந்திய காபி ஏற்றுமதி ...
நெருக்கடியில் தவிக்கும் வேளாண் துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2012
04:14

புதுடில்லி: வேளாண் துறை உற்பத்தி சிறப்பான அளவில் உள்ளது. இருப்பினும், மக்கள் தொகை பெருக்கம், இயற்கை வள ஆதாரங்கள் குன்றி வருவது உள்ளிட்ட பல நெருக்கடிகளில், இந்திய வேளாண் துறை சிக்கி தவித்து வருகிறது என, மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் தாரிக் அன்வர் தெரிவித்தார்.
கடந்த 1951-52ம் நிதியாண்டில், நாட்டின் உணவு தானிய உற்பத்தி, 5.2 கோடி டன் என்ற அளவில் இருந்தது. இது,மிக வேகமாக வளர்ச்சி கண்டு, சென்ற 2011-12ம் நிதியாண்டில், 25.74 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.

கடந்த, 20 ஆண்டுகளில், வேளாண் துறையில் குறிப்பிடத்தக்க அளவிற்கு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், மக்கள் தொகை அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, விளை நிலங்கள் சுருங்கி வருவது போன்றவற்றால், இந்திய வேளாண் துறை நெருக்கடி நிலைக்கு ஆளாகியுள்ளது.இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 1951ம் ஆண்டில், 0.91 ஹெக்டேராக இருந்த, தனிநபர் நிலப் பயன்பாடு, சென்ற, 2001ம் ஆண்டு, 0.32 ஹெக்டேராக சரிவைக் கண்டுள்ளது. இது, வரும் 2050ம் ஆண்டில், 0.09 ஹெக்டேராக மிகவும் வீழ்ச்சி காணும்.வேளாண் துறையை பாதிக்கும் மற்றொரு முக்கிய காரணியாக பருவ நிலை மாற்றம் உள்ளது. இது, பயிர்கள், பால் மற்றும் மீன் உற்பத்தியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.இது போன்ற பல்வேறு இடர்பாடு களை எதிர்கொள்ள, எதிர்கால உணவு தேவைகள், வாழ்வாதார பாதுகாப்பை உறுதிபடுத்த, திட்டமிட்ட, முறையான ஆய்வுகள் மிகவும் அத்யாவசியமான ஒன்றாகும் என, தாரிக் அன்வர் மேலும் கூறினார்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)