பதிவு செய்த நாள்
28 நவ2012
05:15
புதுடில்லி: நடப்பு 2012-13ம் பருவத்தில் (அக்.,-செப்.,), நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.34 கோடி பொதிகளாக (ஒரு பொதி =170 கிலோ) இருக்கும் என, பருத்தி ஆலோசனை வாரியம் மதிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில், பருத்தி அதிக அளவில் உற்பத்தியாகும் நாடுகளில், ஒன்றாக
இந்தியா விளங்குகிறது. அதிக கையிருப்பு, குறைவான தேவை போன்ற காரணங்களால்,
தற்போது, சர்வதேச அளவில் பருத்தி விலை குறைந்துள்ளது. இதனால்,
உள்நாட்டிலும், பருத்தி விலை சரிவடைந்து உள்ளது.சென்ற 2011-12ம்
பருவத்தில், இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி, சாதனை அளவாக, 1.29 கோடி பொதிகளை
எட்டியது. உள்நாட்டில், நடப்பு பருவத்தில், சாகுபடி பரப்பளவு குறைந்ததால்,
பருத்தி உற்பத்தி, 3.34 கோடி பொதிகள் என்ற அளவில் தான் இருக்கும் என,
மதிப்பிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக, பருத்தி ஏற்றுமதி, 70 லட்சம் பொதிகள்
என்ற அளவில் தான் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற, 5ம் தேதி
வரையிலுமாக, பொது உரிமம் அடிப்படையில், 4.50 லட்சம் பருத்தி பொதிகள்
ஏற்றுமதி செய்வதற்கு, பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|