பதிவு செய்த நாள்
28 நவ2012
05:20
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், செவ்வாய் கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து, முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டனர். இதையடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம், 1.6 சதவீத ஏற்றத்துடன் முடிவடைந்தது.கிரீஸ் நாடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி.,),
அதன் கடன் அளவை, 124 சதவீதம் குறைக்க ஒப்புக் கொண்டது. இதையடுத்து, ஐரோப்பா
மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம், விறுவிறுப்புடன்
காணப்பட்டது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்றைய பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், வங்கி, நுகர்வோர் சாதனங்கள்
உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு
கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்
போது, 305.07 புள்ளிகள் அதிகரித்து, 18,842.08 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக,
18,862.70 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 18,616.55 புள்ளிகள்
வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள்,
என்.டி.பி.சி., மற்றும் ஓ.என்.ஜி.சி., ஆகிய இரு நிறுவனப் பங்குகளை தவிர,
ஏனைய,
28 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்டது.தேசிய பங்குச்
சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 91.55 புள்ளிகள் உயர்ந்து, 5,727.45
புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,733.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,658 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|