பதிவு செய்த நாள்
11 டிச2012
01:07
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 7,980 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அமெரிக்கா:இது, சென்ற நிதியாண்டின், இதே கால, ஏற்றுமதியை (7,943 கோடி ரூபாய்) விட, 0.47 சதவீதம் சற்றே அதிகமாகும் என, கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது.இந்தியாவின் மொத்த கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில், அமெரிக்காவின் பங்களிப்பு, 24.3 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதைதொடர்ந்து, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் (24.2 சதவீதம்), தென் கிழக்கு ஆசிய நாடுகள் (18.1 சதவீதம்), ஜப்பான் (12.5 சதவீதம்), மேற்கு ஆசிய நாடுகள் (6.3 சதவீதம்), சீனா (5.47 சதவீதம்) ஆகிய நாடுகள் உள்ளன.
சர்வதேச பொருளாதார நெருக்கடியால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிதி நிலை:இதில், அமெரிக்கா மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அதேசமயம், ஒரு சில ஐரோப்பிய நாடுகளின் நிதி நிலை, மேலும், மோசமடைந்து வருகிறது.இந்தியாவில் இருந்து, அதிக அளவிலான, கடல் உணவுப் பொருள்கள், ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்திய இறால்களில்,'எதாக்ஸிகியுன்' என்ற நச்சுப் பொருளின் அளவு, நிர்ணயிக்கப்பட்டதை விட, அதிகமாக உள்ளதாக கூறி, அவற்றின் இறக்குமதியை, ஜப்பான் நிறுத்தியுள்ளது. இதையடுத்து, இப்பிரச்னை குறித்து, உலக வர்த்தக அமைப்பிடம், இந்தியா முறையிட்டு உள்ளது.இதனால், இந்தியாவிலிருந்து, ஜப்பானுக்கு அதிக அளவில் கடல் உணவு பொருட்களை ஏற்றுமதி செய்து வரும், ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களை சேர்ந்த, வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்திய கடல் உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு, சீனா, புதிய விதிமுறைகளையும், தர நிர்ணய சான்றிதழ்களில் மாற்றங்களையும் புகுத்திஉள்ளது.இதுபோன்ற காரணங்களால், ஒட்டுமொத்த அளவில், கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏழு மாதங்களாக, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, சரிவடைந்து காணப்படுகிறது. இதனால், ரூபாய் மதிப்பின் அடிப்படையிலான, இதன் ஏற்று மதி சற்று அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 3.49 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (3.74 லட்சம் டன்) விட, 6.91 சதவீதம் குறைவாகும்.இறால்கணக்கீட்டு காலத்தில், டாலர் மதிப்பின் அடிப்படையிலான ஏற்றுமதி, 16.60 சதவீதம் சரிவடைந்து, 177 கோடி டாலர் என்ற அளவிலிருந்து, 148 கோடி டாலராக குறைந்துள்ளது.
நாட்டின், மொத்த கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில், இறால்களின் பங்களிப்பு, 55.40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதையடுத்து,கருவாடு, கட்லா மீன் வகைகள் உள்ளிட்டை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|