டாட்டா குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி நாளை பொறுப்பேற்புடாட்டா குழுமத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி நாளை பொறுப்பேற்பு ... இந்தியாவின் கச்சா பாமாயில் இறக்குமதி உயரும்:இந்தோனேஷியாவின் வரி குறைப்பால்... இந்தியாவின் கச்சா பாமாயில் இறக்குமதி உயரும்:இந்தோனேஷியாவின் வரி ... ...
அதிக அளவில் அன்னிய முதலீடு குவிவதால்...டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 52 ஆக வலுவடையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2012
00:31

புதுடில்லி:நடப்பு 2012ம் ஆண்டில், பல்வேறு காரணங்களால், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் வெளி மதிப்பு மிகவும் சரிவடைந்தது. இந்நிலையில், மத்திய அரசின் ஊக்குவிப்புத் திட்டங்களால், அன்னிய முதலீடு அதிக அளவில் வரத் துவங்கியுள்ளது.
நிதிபற்றாக்குறை :இதனால், நடப்பு நிதியாண்டின் இறுதியில், ரூபாயின் வெளி மதிப்பு, 52 ஆக வலுவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நடப்பு நிதியாண்டில், ஏற்றுமதி குறைந்ததால், நாட்டின் நடப்பு கணக்கு மற்றும் நிதிப் பற்றாக்குறை உயர்ந்தது.மேலும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அதிக அளவில் தங்கம் இறக்குமதி, ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்னை, அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறைந்தது உள்ளிட்ட காரணங்களால், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, நடப்பாண்டு ஜூன் மாதம், 22ம் தேதி, 57.32 ரூபாயாக வீழ்ச்சிகண்டது.
தர மதிப்பீடு:இத்தருணத்தில், ஸ்டாண்டர்ட் அண்டு பூர்ஸ் நிறுவனம், இந்தியாவின் தர மதிப்பீட்டை உயர்த்தியது. இதன் காரணமாக, ஜூலை மாதத்தில், ரூபாயின் வெளி மதிப்பு, 55 ஆக உயர்ந்தது.மேற்கண்ட காரணங்கள் தவிர, சென்ற செப்டம்பர் மாதத்தில், ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க அரசும், பல்வேறு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்தது.இந்திய அரசு, அன்னிய நேரடி முதலீட்டை கவரும் வகையில், சட்ட நெறிமுறைகளை எளிமைப்படுத்தியது.
இதனால், சரிவடைந்து வந்த ரூபாயின் வெளி மதிப்பு, 51-53 என்ற அளவில் நிலைபெற்றது. குறிப்பாக, அக்டோபர், 5ம் தேதி ரூபாயின் மதிப்பு, 51.35 ஆக வலுவடைந்து காணப்பட்டது.
மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நன்கு இருக்கும் என்ற அடிப்படையில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன. இது, வரும் புத்தாண்டிலும் தொடரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகள்:மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும், வரும் 2013ம் ஆண்டில், இயல்பு நிலைக்குத் திரும்பும் என, பல்வேறு ஆய்வு அமைப்புகள் மதிப்பீடு செய்துள்ளன.இதனால், வரும் மார்ச் மாதத்திற்குள், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, மேலும் வலுவடையும் என, பல வங்கியாளர்களும், ஆய்வு நிறுவனங்களும் கருத்து தெரிவித்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)