பதிவு செய்த நாள்
30 டிச2012
23:41
புதுடில்லி: நடப்பாண்டு, அக்டோபர் மாதத்தில், நாட்டில் உற்பத்தியான கனிமங்களின் மதிப்பு, 16,975 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (14,555 கோடி ரூபாய்) விட, 17 சதவீதம் அதிகம் என, மத்திய கனிம வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி மதிப்பு, 5,850 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, நிலக்கரி (5,067 கோடி ரூபாய்), இரும்புத்தாது (2,418 கோடி ரூபாய்), இயற்கை எரிவாயு (2,130 கோடி ரூபாய்), பழுப்பு நிலக்கரி (361 கோடி ரூபாய்), சுண்ணாம்புக்கல் (338 கோடி ரூபாய்) ஆகிய கனிமங்கள் உள்ளன.சென்ற அக்டோபரில், நாட்டின் மொத்த கனிமங்கள் உற்பத்தி மதிப்பில், கச்சா எண்ணெய், நிலக்கரி, இரும்புத் தாது, இயற்கை எரிவாயு, பழுப்பு நிலக்கரி, சுண்ணாம்புக்கல் ஆகிய ஆறு கனிமங்களின் பங்களிப்பு, 95 சதவீதம் என்ற அளவில் உள்ளது.கணக்கீட்டு காலத்தில், நிலக்கரி உற்பத்தி, 23 சதவீதம் வளர்ச்சிகண்டு, 4.45 கோடி டன்னாகவும், இரும்புத்தாது உற்பத்தி, 12.1 சதவீதம் உயர்ந்து, 1 கோடி டன்னாகவும் அதிகரித்துள்ளன. பாக்சைட் உற்பத்தி, 20.80 சதவீதம் அதிகரித்து, 17.45 லட்சம் டன்னாகவும், கச்சா எண்ணெய் உற்பத்தி, 4.5 சதவீதமும் உயர்ந்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|