பதிவு செய்த நாள்
05 ஜன2013
15:34
சென்னை : மார்ச் மாதத்துக்குள் தனது வங்கி கிளைகளை 1000 கிளைகள் கொண்ட வங்கியாக மாற்ற திட்டமிட்டு இருக்கிறது ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர். கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர். சென்னையில் இவ்வங்கியின் வர்த்தக கிளை விரிவாக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்று பேசிய இவ்வங்கியின் நிர்வாக இயக்குனர் நந்தகுமார், தற்போது எஸ்.பி.டி.க்கு நாடு முழுவதும் 954 கிளைகள் உள்ளது. வரும் மார்ச் மாதத்துக்குள் மேலும் 46 கிளைகள் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் 1000 கிளைகள் கொண்ட வங்கியாக எஸ்.பி.டி.யும் மாறபோகிறது என்றார். மேலும் நடப்பு நிதியாண்டின் அரையாண்டில் வங்கியின் நிகரலாபம் ரூ.317.07 கோடியை எட்டியுள்ளதாகவும், இது 24 சதவீத அதிகம் என்றும், 43 சதவீதம் அளவுக்கு எஸ்.பி.டி. கடனளிப்பு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|