பதிவு செய்த நாள்
19 டிச2008
11:49
புதுடில்லி : கொரிய கார் கம்பெனியான ஹூண்டாய் நிறுவனம், அதன் இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களில் 2,000 பேரை வேலை நீக்கம் செய்ய முடிவு செய்திருக்கிறது. இப்போது அவர்களுக்கு இந்தியாவில் மொத்தம் 8,400 ஊழியர்கள் இருக்கிறார்கள். இதில் சுமார் 3,300 ஊழியர்கள் தற்காலிக ஊழியர்கள். இதில் 2,000 பேரைத்தான் வேலையில் இருந்து நீக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஜனவரி 2009 முதல் படிப்படியாக இவர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், கார்களுக்கான டிமாண்ட் கூடவில்லை என்றாலும் நாங்கள் அடுத்த வருட துவக்கத்தில் இருந்து சில ஷிப்ட்களையும் குறைத்து விடுவோம் என்று ஹூண்டாய் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆறு மாதங்களுக்கு முன் சென்னையில் இருக்கும் ஹூண்டாய் தொழிற்சாலையின் இரு யூனிட்களிலும் ஆறு ஷிப்ட்கள் இயங்கி வந்தன. இப்போது அது ஐந்து ஷிப்ட்களாக குறைக்கப்பட்டிருக்கிறது. அது இனிமேல், வரும் ஜனவரியில் இருந்து நான்கு அல்லது மூன்று ஷிப்ட்களாக குறைக்கப்படும் என்று தெரிகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் அவர்களது கார்களில் மூன்றில் ஒரு பங்கு ஏற்றுமதிதான் செய்யப்படுகிறது. 2009ம் வருடத்தில் ஏற்றுமதி 25 சதவீதம் குறைந்து விடும் என்று எதிர்பார்ப்பதால் , உற்பத்தியை குறைக்க முடிவெடுத்ததாக சொல்கிறார்கள். இப்போது அந்த நிறுவனம் ஷிப்ட் ஒன்றுக்கு 250 கார்கள் வீதம் நாள் ஒன்றுக்கு 1,600 முதல் 1,800 வரை கார்களை தயாரிக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|