பதிவு செய்த நாள்
13 பிப்2013
00:36
மும்பை: வரும் 2015ம் ஆண்டில், நாட்டின் தேயிலை சந்தை மதிப்பு, 33 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, தனியார் ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.தேயிலை அதிகம் உற்பத்தியாகும் முன்னணி நாடுகளுள் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில், 1,500க்கும் அதிகமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதன் வாயிலாக, 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று உள்ளனர். உள்நாட்டின், மொத்த தேயிலை உற்பத்தியில், "பிராண்டு' தேயிலையின் பங்களிப்பு, 55 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இந்தியாவில், "பிராண்டு' தேயிலை சந்தை, ஆண்டுதோறும், 20 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது, உள்நாட்டில், "பிராண்டு' தேயிலை பயன்பாடு சிறப்பான அளவில் அதிகரித்து வருவதுடன், இதன் சந்தை மதிப்பு, 6,000 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த தேயிலை வர்த்தகம், தற்போதைய, 19,500 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்து, 33 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|