தங்கம் விலை சவரனுக்கு ரூ.8  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு ... தொழில் துறை உற்பத்தி மைனஸ் 0.6 சதவீதமாக சரிவு தொழில் துறை உற்பத்தி மைனஸ் 0.6 சதவீதமாக சரிவு ...
தேயிலை சந்தை மதிப்பு ரூ.33 ஆயிரம் கோடியாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2013
00:36

மும்பை: வரும் 2015ம் ஆண்டில், நாட்டின் தேயிலை சந்தை மதிப்பு, 33 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, தனியார் ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.தேயிலை அதிகம் உற்பத்தியாகும் முன்னணி நாடுகளுள் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில், 1,500க்கும் அதிகமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதன் வாயிலாக, 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று உள்ளனர். உள்நாட்டின், மொத்த தேயிலை உற்பத்தியில், "பிராண்டு' தேயிலையின் பங்களிப்பு, 55 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இந்தியாவில், "பிராண்டு' தேயிலை சந்தை, ஆண்டுதோறும், 20 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது, உள்நாட்டில், "பிராண்டு' தேயிலை பயன்பாடு சிறப்பான அளவில் அதிகரித்து வருவதுடன், இதன் சந்தை மதிப்பு, 6,000 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த தேயிலை வர்த்தகம், தற்போதைய, 19,500 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்து, 33 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)