பதிவு செய்த நாள்
19 பிப்2013
09:10
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்க நேர தொடக்கத்தின் (09.06 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 18.53 புள்ளிகள் அதிகரித்து 19519.61 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 9.15 புள்ளிகள் குறைந்து 5889.05 புள்ளிகளோடு காணப் பட்டது.நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான நேற்று, ஓரளவிற்கு நன்கு இருந்தது. சில்லரை முதலீட்டாளர்கள், பங்குகளில் முதலீடு மேற்கொண்டதை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தன.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில் பொறியியல், ரியல் எஸ்டேட், மின்சாரம், உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும் தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, தேவை குறைந்து காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|