பதிவு செய்த நாள்
20 பிப்2013
00:18
கொச்சி:கவுதமாலாவிலிருந்து, அதிகளவில் மலிவு விலையில், ஏலக்காய் இறக்குமதியாக உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, உள்நாட்டு சந்தைகளில், ஏலக்காய் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.அதே சமயம், உலகளவில், இந்திய ஏலக்காய்க்கான தேவை அதிகரித்துள்ளதால், உள்நாட்டில் இதன் விலை மேலும், சரியாமல் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சென்ற வாரத்தில், உள்நாட்டு சந்தைகளில், தரம் வாய்ந்த, ஒரு கிலோ ஏலக்காய் விலை, 700 ரூபாயிலிருந்து, 640 ரூபாயாக சரிவடைந்தது.நடப்பு பருவத்தில், சென்ற 2012ம் ஆண்டு ஆக.,1ம் தேதி முதல், நடப்பாண்டு பிப்., 17ம் தேதி வரையிலான காலத்தில், சந்தைக்கு ஏலக்காய் வரத்து, 8,400 டன்னாகவும், இதன் விற்பனை, 7,969 டன்னாகவும் உள்ளது.கடந்த பருவத்தின் இதே காலத்தில் ஏலக்காய் வரத்து, 12,793 டன்னாகவும், விற்பனை, 12,457 டன்னாகவும் இருந்தது. ஆக, நடப்பு பருவத்தில், இதன் வரத்தும், விற்பனையும் குறைந்து போயுள்ளது என, இத்துறை சார்ந்த நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|