இயற்கை ரப்பர் விலை குறைந்துள்ளதால்...டயர் விலையை நிறுவனங்கள் குறைக்குமா?இயற்கை ரப்பர் விலை குறைந்துள்ளதால்...டயர் விலையை நிறுவனங்கள் குறைக்குமா? ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.136  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு ...
ஆடம்பர விமான வசதியுடன் அதிநவீன சொகுசு பஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2013
08:35

புதுடில்லி:தனியார் ஆடம்பர, "ஜெட்' விமானங்களில் உள்ளது போன்ற, அதிநவீன வசதிகள் கொண்ட, ஆடம்பர பஸ், டில்லியில் விரைவில் இயக்கப்பட உள்ளது. விமானங்களில் உள்ள வசதிகளை போலவே, பஸ்களிலும் இருக்காதா என, ஏங்கும் சாதாரண பயணிகளின் கனவுகளை நனவாக்கும் வகையில், டில்லியில், அதிநவீன வசதியுடன் ஆடம்பர பஸ் இயக்கப்பட உள்ளது.அசோக் லேலேண்ட் நிறுவனமும், "டூ பிள்ல்ஸ் பவுண்டேஷன்' என்ற அமைப்பும் இணைந்து, இந்த ஆடம்பர பஸ்சை உருவாக்கியுள்ளன. இந்த பஸ்சிற்கு, "அசோக் லேலண்டு லக்சுரா மேஜிக்கல் இந்தியா' என, பெயரிடப்பட்டுள்ளது.இந்த பஸ்சில், குளிர்விக்கப்பட்ட மற்றும் சூடான உணவு வகைகள், நவீன பொழுதுபோக்கு சாதனங்கள், குளியலறை, உடற்பயிற்சிக்கூடம் போன்ற பல அதிநவீன வசதிகள் உள்ளன.
ஒன்பது பேர் பயணிக்க கூடிய இந்த ஆடம்பர பஸ்சின் வடிவமைப்பாளர், திலீப் சாப்ரியா கூறியதாவது:ஆடம்பர, தனியார், "ஜெட்' விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளை போல, இந்த பஸ்சில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒன்பது பேர் பயணிக்க முடியும் இந்த வாகனத்தில், விமானத்தை விட குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும்.காலையில் டில்லியில் இருந்து புறப்பட்டு, ஆக்ரா சென்று, அன்று மாலையிலேயே டில்லி திரும்ப, 65 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.இவ்வாறு திலீப் சாப்ரியா தெரிவித்தார். டில்லியை சேர்ந்த மான் டிராவல்ஸ், இந்த ஆடம்பர பஸ்சை சுற்றுலா பயணங்களுக்கு ஏற்பாடு செய்ய உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில், இந்த ஆடம்பர பஸ், டில்லியிலிருந்து இயக்கப்பட உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)