பதிவு செய்த நாள்
24 பிப்2013
00:26
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 15ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 102 கோடி டாலர் (5,610 கோடி ரூபாய்) சரிவடைந்து, 29,351 கோடி டாலராக (16.14 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, இதற்கு முந்தைய 8ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 61 கோடி டாலர் குறைந்து, 29,453 கோடி டாலராக (16.19 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது. ஆக, தொடர்ந்து இரு வாரங்களாக, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது.
மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 99 கோடி டாலர் குறைந்து, 25,978 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. மேலும், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 1.93 கோடி டாலர் சரிவடைந்து, 440 கோடி டாலராகவும், நம் நாடு சர்வதேச நிதியத்தில் வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 1 கோடி டாலர் குறைந்து, 235 கோடி டாலராகவும் உள்ளன.
அமெரிக்க டாலருக்கு எதிரான ஸ்டெர்லிங், யென், யூரோ உள்ளிட்ட இதர நாட்டுச் செலாவணிகளின் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டால், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணி மதிப்பு சரிவடைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|