பதிவு செய்த நாள்
26 பிப்2013
00:13
சென்னை:பொதுத் துறையைச் சேர்ந்த லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி.,), "ஜீவன் சுகம்' என்ற புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.இப்புதிய திட்டத்தின்படி, முதலீட்டாளர்கள் ஒரே ஒரு முறை மட்டும் பிரிமியம் செலுத்தி, காப்பீட்டு வசதியை பெறலாம். பாலிசி காலம், 10 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில், முதலீட்டாளர்கள், குறைந்தபட்சம், 60 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து, பாலிசி முதிர்வின் போது, 1.50 லட்சம் ரூபாய் மற்றும் கூடுதல் பணப் பலன்களை பெற வாய்ப்புள்ளது. அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் நிர்ணயிக்கப் படவில்லை.
மேலும், இத்திட்டத்திற்கு, கடன் வசதியும் கிடைக்கிறது.காப்பீட்டுதாரர், ஐந்தாண்டுகளுக்குள் இறக்க நேரிட்டால், செலுத்திய பிரிமியத் தொகையைப் போன்று, 10 மடங்கு வழங்கப்படும். ஐந்தாண்டுகளுக்கு பிறகு, இறந்தால், செலுத்தப்பட்ட பிரிமியத் தொகையைப் போன்று, 10 மடங்கு தொகையுடன் கூடுதல் தொகையும் வழங்கப்படும். காலவரையறை கொண்ட இப்புதிய காப்பீட்டுத் திட்டத்தில், 8 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். மேலும், வருமான வரிச் சட்டம் 80சி - பிரிவின் கீழ், வரிச்சலுகையும் உண்டு என, எல்.ஐ.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|