பதிவு செய்த நாள்
27 பிப்2013
00:41
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், நாட்டின் முந்திரி பருப்பு ஏற்றுமதி, 75,798 டன்னாக சரிவடைந்துள்ளது. இதன் மதிப்பு, 3,089 கோடி ரூபாயாகும்.ஆக, அளவின் அடிப்படையில், இதன் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டின், இதே காலத்தை விட, 17 சதவீதம் குறைந்துள்ளது.கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின், முந்திரி பருப்பு ஏற்றுமதி, 1,31,760 டன்னாக இருந்தது. இதன் மதிப்பு, 4,390 கோடி ரூபாயாகும்.
உள்நாட்டில் உற்பத்தி குறைவால், நம் நாடு, தான்சானியா, மேற்கு ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து, முந்திரி கொட்டையை இறக்குமதி செய்து கொள்கிறது. நடப்பு நிதியாண்டில், இதுவரை, 14 லட்சம் டன் முந்திரி கொட்டை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இறக்குமதி செய்யப்படும் முந்திரி கொட்டையின் விலை அதிகரித்துள்ளதால், மறு ஏற்றுமதி செய்யப்படும் முந்திரி வாயிலாக கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சென்ற ஜனவரி மாதத்தில், 71,610 டன் முந்திரி கொட்டை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியை விட, இரண்டு மடங்கு அதிகமாகும்.நம் நாட்டின், முந்திரி ஏற்றுமதிக்கு முக்கியச் சந்தைகளாகத் திகழும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், முந்திரிக்கான தேவை குறைந்துள்ளது. இதுவும், நாட்டின் முந்திரி ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக, வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|