பதிவு செய்த நாள்
06 மார்2013
10:06
புதுடில்லி : ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களை கவருவதற்காக வடஇந்தியாவின் 5 மாநிலங்களில் இலவச ரோமிங் திட்டத்தை பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டம் தற்போது டில்லியில் உள்ள ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.
பார்தி ஏர்டெல் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தின்படி, ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் பீகார், ஜார்கண்ட், உத்திர பிரதேசம், உத்திரகாண்ட் மற்றும் கோல்கட்டா நீங்களாக மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இலவச ரோமிங் சேவையை பெற முடியும். இவர்கள் ரூ.21 ரீசார்ஜ் தொகையில் சுமார் 30 நாட்கள் வரை இந்த 5 மாநிலங்களில் ரோமிங் இல்லாமல் சராசரி கட்டணத்திலேயே பேசிக் கொள்ளலாம். மேலும் இலவச இன்கம்மிங் அழைப்புக்களையும் பெற முடியும்.
தற்போது டில்லியில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்கள், இன்கம்மிங் அழைப்புக்களுக்கு ரூ.1 கட்டணம் செலுத்தி வருகின்றனர். உள்ளூர் அவுட்கோயிங் அழைப்புக்களுக்கு ரூ.1ம், ரோமிங் உடனான எஸ்.டி.டி., அழைப்புக்களுக்கு ரூ.1.5 ம் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|