பதிவு செய்த நாள்
18 மார்2013
15:00
லட்சக்கணக்கில் கார் விலை கூறப்படுவது, அந்த காலமாகி விட்டது. அதற்கு ஏற்றார் போல், இந்தியாவில், கோடிக்கணக்கில் விலை கொண்ட கார்களின் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஜாக்குவார் லேண்டு ரோவர் கார் நிறுவனத்தை, இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. அது முதல், ஜாக்குவார் லேண்டு ரோவர் கார்கள், புதிது புதிதாக, இந்தியாவில் அறிமுகமாகி வருகின்றன. இந்த நிறுவனம், சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் மாடல் கார்களை விற்பனை செய்வதில், பிரபலமானது. தற்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், "ஜாக்குவார் எக்ஸ்ஜே அல்டிமேட்' என்ற காரை (லாங் வீல் பேஸ்), இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என, இரண்டு வகைகளிலும் இந்த கார் கிடைக்கும். பெட்ரோல் காரின் விலை, ரூ.1.88 கோடி(எக்ஸ்ஷோரூம், டில்லி); இந்த காரில், 5.0 லிட்டர் வி8 சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் காரின் விலை, ரூ.1.78 கோடி; இந்த காரில், 3.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு வகை கார்களும், 8 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டது. இந்த கார்கள் வெளிநாட்டில் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவில், இறக்குமதியாகி, விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார், ரியர் வீல் டிரைவ் வசதி கொண்டது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|