பதிவு செய்த நாள்
26 மார்2013
00:15
புதுடில்லி:இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக, கடந்த நாலரை ஆண்டுகளில், 1,714 கோடி ரூபாய் அளவிற்கு பரஸ்பர வர்த்தகம் நடைபெற்றுள்ளது.கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் முதல், இந்தியாவில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இருந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இடையிலான, சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இரு தரப்பு வர்த்தகர்களும், வாரத்தில் நான்கு நாட்கள், 21 வகையான பொருட்களை மட்டுமே, விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.ஜம்முவில் பூன்ச் மற்றும் காஷ்மீரில் உரி என, இரண்டு இடங்களில், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, பண்டமாற்று முறையில், இந்த பரஸ்பர வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்த வகையில், இதுவரை இந்தியாவில் இருந்து, 20,128 லாரிகள் மூலம், 1,51,281 டன் பொருட்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு, 903 கோடி ரூபாயாகும்.அதுபோன்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து,14,233 லாரிகள் வாயிலாக, 1 லட்சம் டன் பொருட்களை, இந்தியா இறக்குமதி செய்துள்ளது. பாகிஸ்தான் ரூபாயில் இதன் மதிப்பு, 1,469 கோடியாகும்.கடந்த 2009ம் ஆண்டு, இந்தியாவின் இறக்குமதியில், 90 சதவீதம் பூண்டு இடம்பெற்றிருந்தது. அதுபோன்று, ஏற்றுமதியில் வெங்காயத்தின் பங்களிப்பு, 95 சதவீதமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|