தங்கம் விலை சவரனுக்கு ரூ.80  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு ... ரயிலில் முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை குறைந்தது ரயிலில் முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை குறைந்தது ...
மருந்துகளுக்கு "பார்கோடு'அமலுக்கு வருவது தள்ளிவைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஏப்
2013
00:06

மும்பை:சாதாரண மருந்து பெட்டிகளிலும், "பார்கோடு' குறியீடை பதிவு செய்யும் திட்டம், அமலுக்கு வருவது, வரும், 2014ம் ஆண்டு, ஜூலை வரை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.ஒரு பொருள், எங்கு, எப்போது தயாரிக்கப்பட்டு உள்ளது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள, "பார்கோடு' தொழில்நுட்பம் உதவுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன், "இந்தியாவில் தயாரிக்கப்பட்டது' என்ற முத்திரையுடன், நைஜீரியாவில் இறக்குமதியான போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.சீனாவில் தயாரிக்கப்படும் இத்தகைய தரக்குறைவான மருந்துகள், இந்தியாவில் தயாரானவை என்று கூறி, நைஜீரியாவில் அதிக விலைக்கு விற்கப்படுவது, மத்திய அரசின் கவனத்திற்கு வந்தது.
இதையடுத்து, இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மருந்துகளுக்கு, அட்டை, உள் அட்டை, மருந்து புட்டி அல்லது மாத்திரை பட்டி என, மூன்று அடுக்கு, "பார்கோடு' குறியீடு அவசியம் என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.இதன் மூலம், போலி மருந்துகளை அடையாளம் காணவும், தரமான இந்திய மருந்துகளின் சிறப்பு சீர்கெடாமல் இருக்கவும், வழி ஏற்பட்டுள்ளது.
அடிப்படை பேக்கிங் பிரிவில் (மருந்து புட்டி, மாத்திரை பட்டி போன்றவை) "பார்கோடு' நடைமுறையை பின்பற்ற, மருந்து நிறுவனங்களுக்கு, வரும் ஜூலை வரை "கெடு' விதிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், மருந்து புட்டி அல்லது மாத்திரை பட்டிகளுக்கான "பார்கோடு' நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, இந்திய மருந்து
ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இதை நடைமுறைப்படுத்துவதில், சிறிய மருந்து நிறுவனங்களுக்கு அதிக செலவும், சிரமமும் ஏற்படும் என,தெரிவிக் கப்பட்டது.இதையடுத்து, மருந்து நிறுவனங்களுக்கு மேலும் அவகாசம் அளிக்கும் வகையில், அடிப்படை பேக்கிங் பிரிவில், "பார்கோடு' அமலுக்கு வருவது, வரும், 2014ம் ஆண்டு, ஜூலை வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, வெளி நாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)