பதிவு செய்த நாள்
23 ஏப்2013
00:35
மும்பை:நடப்பு 2013ம் ஆண்டில், இந்திய அலைபேசி சேவை துறையின் சந்தை மதிப்பு, 1.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். இருப்பினும் இது, உலக அலைபேசி சேவை சந்தை மதிப்பில், 2 சதவீதம் என்ற அளவில் தான் உள்ளது என, சர்வதேச ஆய்வு நிறுவனமான கார்ட்னர் தெரிவித்து உள்ளது.கடந்த 2012ம் ஆண்டு, இந்திய அலைபேசி சேவை நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 1.10 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டில், இச்சேவை துறையின் சந்தை மதிப்பு, 8 சதவீதம் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அலைபேசி சேவை நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. என்றாலும், இத்துறையில் உள்ள பல நிறுவனங்கள், அவற்றின் லாப வரம்பை உயர்த்த இயலாமல் உள்ளன.கடந்த 2012ம் ஆண்டில், இந்தியாவில், அலைபேசி சேவையை பெற்றிருந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 71.20 கோடியாக இருந்தது. இது, நடப்பாண்டில், 11 சதவீதம் வளர்ச்சி கண்டு, 77 கோடியாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
உலகளவில், அலைபேசி சேவையில், இந்தியாவின் சந்தை பங்களிப்பு, 12 சதவீதம் என்ற அளவில் உள்ளது. ஆனால், இச்சேவை துறையின் வருவாயில், இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு, 2 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது.இந்திய அலைபேசி சேவை சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், இத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் லாப வரம்பு குறைவாக உள்ளது என, கார்ட்னர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|