தங்கம் விலை சவரனுக்கு ரூ.24  உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்வு ... இயற்கை ரப்பர் உற்பத்தி 9.12 லட்சம் டன்னாக உயரும் இயற்கை ரப்பர் உற்பத்தி 9.12 லட்சம் டன்னாக உயரும் ...
இந்திய அலைபேசி சேவை சந்தை மதிப்பு:ரூ.1.20 லட்சம் கோடியாக அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2013
00:35

மும்பை:நடப்பு 2013ம் ஆண்டில், இந்திய அலைபேசி சேவை துறையின் சந்தை மதிப்பு, 1.20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். இருப்பினும் இது, உலக அலைபேசி சேவை சந்தை மதிப்பில், 2 சதவீதம் என்ற அளவில் தான் உள்ளது என, சர்வதேச ஆய்வு நிறுவனமான கார்ட்னர் தெரிவித்து உள்ளது.கடந்த 2012ம் ஆண்டு, இந்திய அலைபேசி சேவை நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 1.10 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டில், இச்சேவை துறையின் சந்தை மதிப்பு, 8 சதவீதம் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அலைபேசி சேவை நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. என்றாலும், இத்துறையில் உள்ள பல நிறுவனங்கள், அவற்றின் லாப வரம்பை உயர்த்த இயலாமல் உள்ளன.கடந்த 2012ம் ஆண்டில், இந்தியாவில், அலைபேசி சேவையை பெற்றிருந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 71.20 கோடியாக இருந்தது. இது, நடப்பாண்டில், 11 சதவீதம் வளர்ச்சி கண்டு, 77 கோடியாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
உலகளவில், அலைபேசி சேவையில், இந்தியாவின் சந்தை பங்களிப்பு, 12 சதவீதம் என்ற அளவில் உள்ளது. ஆனால், இச்சேவை துறையின் வருவாயில், இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு, 2 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது.இந்திய அலைபேசி சேவை சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், இத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் லாப வரம்பு குறைவாக உள்ளது என, கார்ட்னர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)