பதிவு செய்த நாள்
14 மே2013
00:20
புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தயாரிப்பு துறையின் பங்களிப்பு, 15 சதவீதத்திற்கும் கீழ் குறையும் என, "அசோசெம்' அமைப்பு மதிப்பிட்டுள்ளது.இது, சென்ற 2012-13ம் நிதியாண்டில், 15.2 சதவீதமாகவும், அதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில், 15.7 சதவீதமாகவும் இருந்தது.தொழில் துறையின் உபரி உற்பத்தி திறனை, முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு, தேவைப்பாடு குறைந்துள்ளது. இதன் காரணமாக, தயாரிப்பு துறையின் வளர்ச்சி, மந்தகதியில் உள்ளது.மத்திய அரசு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தயாரிப்பு துறையின் பங்களிப்பை, 25 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், நிலைமை அதற்கு நேர்மாறாக உள்ளது என, "அசோசெம்' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|