பதிவு செய்த நாள்
18 மே2013
00:38
புதுடில்லி:தேசிய மருந்து விலை கொள்கைப்படி, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவால், உயிர் காக்கும், 348 மருந்துகளின் விலை, 80 சதவீதம் வரை குறையும்.கடந்த 1995ம் ஆண்டின், மருந்து விலை கட்டுப்பாட்டு உத்தரவின்படி, தற்போது, 74 மருந்துகள், கட்டுப்படுத்தப்பட்ட விலையின் கீழ், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில், சென்ற 2012ம் ஆண்டு நவ., 22ம் தேதி, தேசிய மருந்து விலை கொள்கைக்கு, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, டிச., 7ம் தேதி, இது குறித்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, நடப்பு மே மாதம் 15ம் தேதி முதல் மருந்து விலை கட்டுப்பாட்டு உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி, 348 அத்தியாவசிய மருந்துகள், குறைந்த விலையில் விற்பனைக்கு வர உள்ளன. குறிப்பாக, புற்றுநோய், தொற்றுநோய் தடுப்பு மருந்துகளின் விலை, 50 - 80 சதவீதம் வரை குறையும்.தேசிய மருந்து விலை கொள்கைப்படி, மூலப்பொருட்களின் செலவினத்தை கருத்தில் கொள்ளாமல், ஒரு சதவீதத்திற்கும் அதிகமான சந்தை பங்களிப்பு கொண்ட மருந்துகளின் சராசரி விலையை ஒட்டி, தேர்வு செய்யப்பட்ட மருந்துகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|