தங்கம் விலை சவரனுக்கு ரூ.544 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.544 உயர்வு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைவு ...
டாக்டர் பத்ராஸ் வர்த்தக விரிவாக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2013
15:20

துபாய், இலண்டன் ஆகிய இடங்களில் அதன் பன்னாட்டு ஓமியோபதி கிளினுக்குகளை வெற்றிகரகமாகத் தொடங்கிய பிறகு, டாக்டர். பத்ராஸ் பாஸிடிவ் ஹெல்த் கிளினிக் பிரைவேட் லிமிடெட், 3 நாடுகளில் 49 நகரங்களில் கிளினுக்குகளை நடத்தி வருகின்றது, தவிர இப்போது தென்னிந்தியாவில் தனது 37வது கிளினிக்கை அதாவது மதுரையில் தனது முதலாவது கிளினிக்கைத் தொடங்கி விரிவுபடுத்தியுள்ளது. டாக்டர் பத்ராஸின் தெற்கு மண்டலத் தலைவர் டாக்டர் டேனியல் ராஜ் பேசுகையில் இவ்வாறு கூறினார், “இந்தியாவில் மாற்று மருத்துவத்தின் தேவை வேகமாக விரிவடைந்து வருகின்றது என்பதால் வருங்காலத்தில் ஓமியோபதி மருத்துவம் நன்கு போற்றப்படும். ஓமியோபதி ஒரு பாதுகாப்பான மென்மையான முறைமை என்பதால் உலக முழுவதும் பிரபலமடைந்து அதன் தேவை அதிகரித்து வருகின்றது, என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “நோயின் வெறும் அறிகுறிகளுக்குச் சிகிச்சை அளிப்பதைவிட, தீவிரமான அல்லது நாட்பட்ட நோய்களின் அடிப்படையான காரணங்களில் கவனம் செலுத்துகின்றது. விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக, டாக்டர் பத்ராஸ், இவ்வாண்டு, பெங்களூரு, மும்பை, புதுடில்லி ஆகிய பெருநகரங்கள் மட்டுமின்றி, அலகாபாத், பெல்காம், புவனேஷ்வர், குவாலியர், ஜோத்பூர், கோட்டா, மதுரை, ராஜ்காட், ரெய்பூர், ராஞ்சி, பாட்னா ஆகிய இடங்களிலும் புதிய கிளினுக்குகளை திறக்க உள்ளது. நாட்பட்ட சுவாச நோய்கள், முடி உதிர்தல், தோல் அழற்சி, ஒவ்வாமை, வெண் திட்டுக்கள், எடை மேலாண்மை, நாட்பட்ட சோர்வு அறிகுறிகள் (சிஎஃப்எஸ்), மகளிர் மற்றும் குழந்தைகளின் நோய்கள், வாழ்க்கைமுறை மற்றும் மனஅழுத்தம் தொடர்பான கோளாறுகள் ஆகியன உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். டாக்டர் பத்ரா உலக அளவில் ஓமியோபதி குறித்துள்ள எண்ணத்தை மாற்றியுள்ள தில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளார். இன்று, உலகின் எல்லா இடங்களிலும் உள்ள டாக்டர் பத்ராஸ் கிளினிக்குகளின் ஓமியோபதி மருத்துவச் சேவைகளின் பயனைப்பெற மக்கள் அங்கு வருகின்றார்கள். இன்றைய தினம் வரை, 3 லட்சம் முடி நோயாளிகளுக்கும் 1 லட்சம் தோல் நோயாளிகளுக்கும் டாக்டர் பத்ராஸ் வெற்றிகரமாக சிகிச்சை அளித்துள்ளது, என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)