பதிவு செய்த நாள்
02 ஜூன்2013
01:01
புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதத்தில், நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 2.3 சதவீதம் என்ற அளவில் சரிவுஅடைந்துள்ளது.இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 5.7 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.
இயற்கை எரிவாயு:சென்ற ஏப்ரல் மாதத்தில், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உரம் ஆகிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, பின்னடைவை கண்டதையடுத்து, ஒட்டு மொத்த அளவில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளதாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில், இத்துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 3.2 சதவீதம் என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2012-13ம் நிதியாண்டில், மேற்கண்ட எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 2.6 சதவீதம் என்ற அளவில் சரிவுஅடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில், 5 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது.சென்ற ஏப்ரல் மாதத்தில், இயற்கை எரிவாயு உற்பத்தி, மைனஸ் 17.4 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டு உள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், மைனஸ் 11.3 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
சென்ற ஏப்ரலில், கச்சா எண்ணெய் உற்பத்தி, மைனஸ் 1.2 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், மைனஸ் 1.4 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
உரம்:உரத் துறையின் உற்பத்தி, மைனஸ் 2.4 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டு உள்ளது. இது, கடந்தாண்டு ஏப்ரல், மாதத்தில் மைனஸ் 9.3 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
அதேசமயம், நிலக்கரி துறையின் உற்பத்தி வளர்ச்சி, 3.1 சதவீதம் என்ற அளவிலும், சிமென்ட் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 8.3 சதவீதம் என்ற அளவிலும், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி, 5.6 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி கண்டுள்ளன.
உருக்கு துறை:சென்ற ஏப்ரல் மாதத்தில், உருக்கு துறையின் உற்பத்தி, 1.9 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 2.3 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது.கணக்கீட்டு மாதத்தில், மின்சாரத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 5.4 சதவீதம் என்ற அளவிலிருந்து, 3.1 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|