பதிவு செய்த நாள்
03 ஜூன்2013
00:25
இந்திய இறால்களின் இறக்குமதிக்கு, அமெரிக்க அர”, 5.91 சதவீதம் இறக்குமதி எதிர் தீர்வை விதித்துள்ளது. எனினும், இறுதி தீர்வை, வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என, அமெரிக்க வர்த்தக அமைச்சகம் (டீ.ஓ.சி.,) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, இந்திய இறால் ஏற்றுமதியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்றுமதி செலவு:இதுகுறித்து, இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி ரெட்டி கூறியதாவது:இறக்குமதி எதிர் தீர்வையால், இந்திய இறால் ஏற்றுமதி பாதிக்கும். ஏற்றுமதியாளர்கள் மட்டுமின்றி, பண்ணை இறால் உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவர்.தற்போது, 1 கிலோ இறால்களுக்கான ஏற்றுமதி செலவு, 17 ரூபாயாக உள்ளது. இது, புதிய வரி மற்றும் டாலர் மதிப்பு உயர்வால், 30 ரூபாயாக உயரும். ஏற்றுமதி செலவினம் உயர்ந்தால், ஏற்றுமதியாளர்கள், பண்ணை இறால் உற்பத்தியாளர்களிடம் விலையை குறைத்து கேட்பர்.இது, மீன் வளத் துறையை, குறிப்பாக, பண்ணை மீன் வளர்ப்பு துறையை கடுமையாக பாதிக்கும்.
கடந்த ஐந்து அல்லது ஆறு மாதங்களாக, பல்வேறு காரணங்களால், கடலில் மீன் கிடைப்பது குறைந்துள்ளது. அதே சமயம், விசைப்படகுகளுக்கான டீசல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.நெருக்கடி:இந்த நிலையில், அமெரிக்கா விதித்துள்ள வரி, இறால் ஏற்றுமதி துறைக்கு மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.அமெரிக்காவில் உள்ள, வளைகுடா இறால் தொழில் கூட்டமைப்பு, குறைந்த விலை இறால்களின் இறக்குமதியால், உள்நாட்டு இறால் தொழில் பாதிக்கப்படுவதாக, அந்நாட்டு அரசிடம் புகார் அளித்தது.
இதையடுத்து, டீ.ஓ.சி., கடந்த 2012ம் ஆண்டு டிசம்பரில், இந்தியா உள்ளிட்ட ஆறு நாடுகளின் இறால் இறக்குமதி குறித்து ஆய்வு மேற்கொண்டது.மானிய உதவிகள்:இதில், முதற்கட்டமாக, இந்தியாவில், கடல் உணவு ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும், 21 வகையான மானிய உதவிகள் குறித்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. முழு அளவிலான இந்த விசாரணையை, அமெரிக்க சர்வதேச வர்த்தக ஆணையம் மேற்கொள்ளும்.மத்திய, மாநில அர”களின் பல்வேறு மானிய உதவிகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் போன்றவற்றால், இறால்களை குறைந்த விலையில் ஏற்றுமதி செய்ய முடிகிறது. இது, அமெரிக்க உள்நாட்டு கடல் உணவுத் துறையை பாதிப்பதாக உள்ளது என, டீ.ஓ.சி., கருதுகிறது.
மலேஷியா:இதே போன்று, சீனாவின், 25 மானிய உதவி திட்டங்கள், வியட்னாமின், 20 மானிய உதவி திட்டங்கள் ஆகியவை குறித்தும், டீ.ஓ.சி., முழு விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.இந்த வகையில், மலேஷியா (16), இந்தோனேஷியா (14), தாய்லாந்து (12), ஈகுவடார் (7) ஆகிய நாடுகளின் மானிய உதவி திட்டங்கள் குறித்தும் முழு அளவிலான விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து, மேற்கண்ட நாடுகளின் இறால்களுக்கும், டீ.ஓ.சி., இறக்குமதி எதிர் தீர்வை விதித்து உள்ளது.இதன்படி, மலேஷியா நாட்டின் இறால் இறக்குமதிக்குத் தான், மிக அதிகமாக, 62.74 சதவீதம் எதிர் தீர்வை விதிக்கப்பட்டு உள்ளது.
தாய்லாந்து :இது, முழு அளவிலான விசாரணையின் முடிவில், குறைக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு இல்லாவிடில், மலேஷியாவின் இறால் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதிக்கக் கூடும்.வியட்னாம் மற்றும் தாய்லாந்து இறால்களுக்கு, அமெரிக்கா, முறையே, 6.07 சதவீதம் மற்றும் 2.09 சதவீதம் இறக்குமதி எதிர் தீர்வை விதித்துள்ளது.அதே சமயம், ஈகுவடார் மற்றும் இந்தோனேஷியா நாடுகளின் இறால்களுக்கு, கிட்டத்தட்ட வரி விதிப்பு இல்லாத வகையில், முறையே 0.31 சதவீதம் மற்றும் 0.81 சதவீதம் இறக்குமதி எதிர் தீர்வை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களின் நுகர்வு:அமெரிக்காவின் இறால் நுகர்வு, கடந்த 2011ம் ஆண்டு 130 கோடி பவுண்டுகளாக இருந்தது. இதில், இறக்குமதியின் பங்களிப்பு, 87.60 சதவீதமாகும். இதே காலத்தில், இறக்குமதி வரி தீர்வைக்கு உள்ளான நாடுகளில் இருந்து, 430 கோடி டாலர் மதிப்பிலான இறால்கள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன. இது, இறக்குமதியான மொத்த இறால்களின் மதிப்பில், 86 சதவீதமாகும்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|