தங்கம்சவரனுக்கு ரூ.80 உயர்வுதங்கம்சவரனுக்கு ரூ.80 உயர்வு ... எல்.ஐ.சி., நிறுவனம்: புதிய தலைவர் பொறுப்பேற்பு எல்.ஐ.சி., நிறுவனம்: புதிய தலைவர் பொறுப்பேற்பு ...
மொத்த மின் பற்றாக்குறை 6.7 சதவீதமாக அதிகரிக்கும்- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2013
00:04

நடப்பு 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டு மொத்த மின் பற்றாக்குறை. 6.7 சதவீதமாக உயரும். உச்ச பட்ச நேரத்தில், மின் பற்றாக்குறை, 2.3 சதவீதமாக இருக்கும் என, மத்திய மின் ஆணையம் (சி.இ.ஏ) தெரிவித்துள்ளது.இது குறித்து, ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்-நாட்டில் போதிய அளவிற்கு மின் பகிர்மான வசதிகள் இல்லாததால், மாநிலங்களின் மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.குறிப்பாக, வடக்கு, வட கிழக்கு, மேற்கு (என்.இ.டபிள்யூ) மின் தொகுப்புகள் மற்றும் தென் பிராந்திய மின் தொகுப்பில், மின் வினி@யாகத்திற்கு கட்டுப்பாடுகள் உள்ளன.இதன் காரணமாக, மின் தட்டுப்பாடு அதிகம் உள்ள தென் மாநிலங்களுக்கு, அதிக அளவில் மின் வினி@யாகம் மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது.நடப்பு நிதியாண்டில், தற்‌போதுள்ள மின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டிற்கு வர உள்ள மின் திட்டங்கள் மூலம், நாட்டின் மொத்த மின் உற்பத்தி, 97,500 கோடி யூனிட்டுகளாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது சென்ற 2012-13ம் நிதியாண்டில், முந்தைய நிதியாண்டை விட, 6.2 சதவீதம் கூடுதல் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.மின்சாரத்திற்கானதேவை, மதிப்பீட்டை விட, 1.04 சதவீதம் உயர்ந்து, 5.1லிருந்து, 6.5 சதவீதமாக அதிகரித்து உள்ளது.கிழக்கு பிராந்தியம் தவிர, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மின் பற்றாக்குறை உள்ளது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் மின் உற்பத்தி திறனில், 35,670 மெகா வாட் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில், அனல் மின்சாரத்தின் பங்களிப்பு, 15,234 மெகா வாட்டாக இருக்கும். நீர் மற்றும் அணு மின் உற்பத்தி, முறையே 1,198 மெகா வாட் மற்றும் 2,000 மெகா வாட்டாக இருக்கும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)