பதிவு செய்த நாள்
04 ஜூன்2013
14:33
சாம்சங் நிறுவனத்தின் மொபைல் விற்பனை வரலாற்றில், அண்மையில், ஏப்ரல் 27ல் வெளியான அதி நவீன, கூடுதல் விலையுள்ள, சாம்சங் காலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போன் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. விற்பனைக்கு அறிமுகமாகி ஒரு மாதத்திற்குள்ளாகவே, விற்பனை யான போன்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கையை காலக்ஸி எஸ்3, 50 நாட்களிலும், காலக்ஸி எஸ் 2, ஐந்து மாதங்களிலும் எட்டியது. சென்ற ஆண்டில், 40 கோடி மொபைல் போன்களை விற்பனை செய்த சாம்சங், இந்த ஆண்டில், பெரிய அளவில் இந்த எண்ணிக்கையை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்ட் சாதனங்களின் விற்பனை யில், 95 சதவீத விற்பனையையும், லாபத்தையும் பெற்றது சாம்சங் நிறுவனமே.
கேலக்ஸி எஸ்4 மொபைலுக்குக் கிடைத்த பெரிய வரவேற்பினைப் பார்த்ததும், தற்போது கருப்பு மற்றும் வெள்ளை (சாம்சங் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் Black Forest and White Mist) நிறங்களில் மட்டுமே உள்ள இந்த போன், அடுத்து மேலும் பல வண்ணங்களில் (Blue Arctic, Red Aurora, Purple Mirage, and Brown Autumn) கிடைக்கும் என சாம்சங் அறிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோன் 5 போனில் புதிய வண்ணங்கள் எதனையும் அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|