பதிவு செய்த நாள்
01 ஜூலை2013
17:36
மும்பை : கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு இன்று(ஜூலை 1ம் தேதி) வாரத்தின் முதல்நாளில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் மீண்டும் 19 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. சென்செக்ஸ் 182 புள்ளிகளும், நிப்டி 56 புள்ளிகள் உயர்வுடனும் முடிந்தது.
இயற்கை எரிவாயு விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்ததைத்தொடர்ந்து அதுதொடர்பான பங்குகள் விலை நல்ல ஏற்றம் கண்டன. குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் நல்ல ஏற்றம் பெற்றதால் இந்திய பங்குசந்தைகள் இன்று ஏற்றத்தில் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 181.58 புள்ளிகள் உயர்ந்து 19,577.39-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 56.65 புள்ளிகள் உயர்ந்து 5,898.85 ஆகவும் உயர்ந்தது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் 24 பங்குகள் விலை ஏற்றத்தில் முடிந்தன. குறிப்பாக மாருதி சுசூகி பங்குகள் விலை 4.37 சதவீதமும், ரிலையன்ஸ் 2.43 சதவீதமும், எல்அண்ட்டி 3.26 சதவீதமும், டாடா பவர் 2.73 சதவீதமும் உயர்ந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|