பதிவு செய்த நாள்
04 ஜூலை2013
09:59
மும்பை : இரண்டு நாள் சரிவிற்கு பிறகு வாரத்தின் நான்காம் நாளில் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி இருக்கிறது. இன்று(ஜூலை 4ம் தேதி) காலை வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 170.25 புள்ளிகள் உயர்ந்து 19,348.01 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 44.20 புள்ளிகள் உயர்ந்து 5,815.10 எனும் அளவிலும் இருந்தன.
அமெரிக்க பங்குசந்தையை தொடர்ந்து ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றம் மற்றும் முதலீட்டாளர்கள் ஐ.டி., வங்கி, ஹேல்த்கேர் உள்ளிட்ட பங்குகளை அதிகளவு வாங்க தொடங்கியது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகளில் இன்று காலையிலேயே ஏற்றம் காணப்படுகிறது.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி 0.12 சதவீதம் சரிந்தும், ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.71 சதவீதம் உயர்ந்தும் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|