பதிவு செய்த நாள்
09 ஜூலை2013
00:36
மும்பை:நடப்பு 2013ம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில், தனியார் பங்கு முதலீடு, 540 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2012ம் ஆண்டில் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்டதை (380 கோடி டாலர்) விட, 42 சதவீதம் அதிகம் என, இ.ஒய்., இந்தியா (முன்பு எர்னஸ்ட் அண்டு யங்) நிறுவனம் தெரிவித்து உள்ளது.இருப்பினும், கணக்கீட்டு காலத்தில், எண்ணிக்கை அடிப்படையிலான இந்த முதலீடு, 9 சதவீதம் குறைந்து, 216 லிருந்து, 197 ஆக சரிவடைந்துள்ளது.
நடப்பாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், மேற்கொள்ளப்பட்ட தனியார் பங்கு முதலீட்டில், பார்தி ஏர்டெல் நிறுவனம், கத்தார் எண்டோமென்ட் நிறுவனங்களுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட தனியார் பங்கு முதலீடு, 120 கோடி டாலராகும்.இதையடுத்து, அலையன்ஸ் டயர் குழுமம் மற்றும் கே.கே.ஆர்., நிறுவனங்களுக்கிடையேயான தனியார் பங்கு முதலீடு, 46 கோடி டாலராகவும், சி.எஸ்.எஸ்., பார்ட்னர்ஸ் குழுமத்துடன் இதர முதலீட்டு குழுமங்கள் மேற்கொண்ட பங்கு முதலீடு, 27 கோடி டாலராகவும் இருந்தது என, இ.ஒய்., இந்தியா நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|