முழு உடல் பரிசோதனை உங்களுக்கு மட்டுமல்ல.. உங்கள் காருக்கும் முக்கியம்!முழு உடல் பரிசோதனை உங்களுக்கு மட்டுமல்ல.. உங்கள் காருக்கும் முக்கியம்! ... சரக்கு போக்குவரத்து துறை20 ஆயிரம் கோடி டாலரை எட்டும் சரக்கு போக்குவரத்து துறை20 ஆயிரம் கோடி டாலரை எட்டும் ...
பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும்: "கிரிசில்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2013
00:17

மும்பை:நடப்பு, 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.5 சதவீதமாக குறையும் என, ஆய்வு நிறுவனமான கிரிசில் மறுமதிப்பீடு செய்துள்ளது. இது, இதன் முந்தைய மதிப்பீட்டில், 6 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
பணவீக்கம்:டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சரிவடைந்து, ஜூலை, 8ம் தேதி, வரலாறு காணாத அளவிற்கு, 61.21ஆக மிகவும் வீழ்ச்சி கண்டது.இதை தடுத்து நிறுத்தும் வகையில், ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கையால், தற்போது ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது.வங்கிகளுக்கான, "ரெப்போ' விகிதம் குறைக்கப்பட்டதால், வங்கிகள் பெறும்,கடனுக்கான செலவினம் அதிகரித்துள்ளது.ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான, "ரெப்போ' விகிதத்தை மேலும் குறைக்கும் நிலையில், அது நாட்டின் பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்யும்.
அமெரிக்கா:அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்தே இருக்கும் என, மதிப்பிடப் பட்டு உள்ளது. இது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.நாட்டின் பண வீக்கம், 5.3 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, கிரிசில் முன்னறிவிப்பு செய்து உள்ளது. இருப்பினும், ரூபாயின் வெளிமதிப்பு சரிவடையும் நிலையில், அது பணவீக்க உயர்விற்கு வழிவகுக்கும்.
நடப்பு நிதியாண்டில், நாட்டின் நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், முந்தைய மதிப்பீடான, 5.1 சத வீதத்திலிருந்து, 5.2 சதவீதமாக உயரக்கூடும். அதேசமயம், மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், நிதிப்பற்றாக் குறையை, 4.8 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயித்து உள்ளது. இது, கடந்த நிதியாண்டில், 4.9 சதவீதமாக இருந்தது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை:எண்ணெய் அல்லாத இதர பொருட்கள், குறிப்பாக, தங்கம் இறக்குமதி குறைந்துள்ளதால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4.2 சதவீதமாக குறையும். இது, முந்தைய மதிப்பீட்டில், 4.5 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப் பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும் என, மதிப்பிடப் பட்டு உள்ளது. என்றாலும், அன்னிய முதலீடு, 8,100 கோடி டாலர் அளவிற்கு வரவேண்டும்.
இச்சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால், நடப்பு நிதியாண்டில், அன்னிய நிகர முதலீடு, 7,600 கோடி டாலர் அளவிற்கு வரும் என, கிரிசில் மதிப்பிட்டு உள்ளது.ரூபாயின் வெளிமதிப்பு சரி வடைந்துள்ளது மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளது போன்றவற்றால், பல துறைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது.
பொறியியல்:குறிப்பாக, மின்சாரம், கட்டுமானம், பொறியியல், உருக்கு போன்ற துறை களின் உற்பத்தி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இது, வங்கிகளின், வசூலாகாத கடன் அதிகரிப்பிற்கு வழிகோலும்.இவ்வாறு, கிரிசில் நிறுவனம் அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)