பதிவு செய்த நாள்
31 ஜூலை2013
09:56
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 22.95 புள்ளிகள் சரிந்து 19325.39 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 16.70 புள்ளிகள் சரிந்து 5738.35 புள்ளிகளோடு காணப்பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று மிகவும் மோசமாக இருந்தது. ரிசர்வ் வங்கி, அதன் நிதி ஆய்வு கொள்கையில், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.5 சதவீதமாக குறையும் என்ற மதிப்பீட்டை வெளியிட்டது.மேலும், ரிசர்வ் வங்கி, "ரெப்போ' மற்றும் "ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதங்களையும் குறைக்கவில்லை. இது போன்ற காரணங்களால், "சென்செக்ஸ்', 1.25 சதவீதம் சரிவுடன் முடிவடைந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|