பதிவு செய்த நாள்
31 ஜூலை2013
23:50
மும்பை:தொடர்ந்துசரிவடைந்து வந்த, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நேற்று, ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால்சற்று உயர்ந்தது.
நேற்று முன்தினம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ.”ப்பாராவ், காலாண்டு ஆய்வறிக்கையை வெளியிட்டு பேசினார். அப்போது, ரூபாய் மதிப்பின் ஏற்ற, இறக்கம் குறைந்து, ஒரு நிலைப்பாட்டிற்கு வந்தால்தான், பணப்புழக்கத்தை குறைக்கும் நடவடிக்கைகள் திரும்ப பெறப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதன் எதிரொலியாக, நேற்று, அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, முன் தினத்தை (60.49) விட, 37 காசுகள் குறைந்து, 60.86 ஆக வீழ்ச்சி கண்டது. இது, ஒரு கட்டத்தில் 61.17 ஆக பெரும் சரிவைக் கண்டது.இதையடுத்து, ரிசர்வ் வங்கி, உடனடியாக அதிக அளவில் டாலரை விற்பனை செய்தது. இதனால், ரூபாய் மதிப்பு மேலும்சரிவது தடுக்கப்பட்டது. வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 60.37 ஆக காணப்பட்டது.ரூபாய் மதிப்பு, கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி, வரலாறு காணாத வகையில், 61.21 ஆக சரிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|