தொழில்துறை முதலீடுகளிட்டு திட்டங்களிலும் குஜராத் முதலிடம்தொழில்துறை முதலீடுகளிட்டு திட்டங்களிலும் குஜராத் முதலிடம் ... ஐந்தாவது ஆண்டாக கரும்பு உற்பத்தியில் உபரி நிலை ஐந்தாவது ஆண்டாக கரும்பு உற்பத்தியில் உபரி நிலை ...
நாட்டின் பருத்தி உற்பத்தியில்புதிய சாதனை படைக்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2013
00:41

புதுடில்லி:பருத்தி உற்பத்தியில், இந்தியா புதிய சாதனை படைக்கும் என, மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார் நம்பிக்கை தெரிவித்தார்.டில்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நாடு முழுவதும், சராசரியை விட, அதிகமாக பருவ மழை பெய்துள்ளது. குறிப்பாக, பருத்தி பயிரிடப் பட்டுள்ள பகுதிகளில், நல்ல அளவில் மழை பெய்துள்ளது. அதே சமயம் சில பகுதிகளில், அளவிற்கு அதிகமாக மழை பொழிந்துள்ளது. ஆனால், அதனால், ஒட்டுமொத்த பருத்தி உற்பத்தி பாதிக்கப்படாது.
நடப்பு 2013-14ம் நிதியாண்டு, பருத்தி உற்பத்தியில், புதிய சாதனை படைக்கப்படும்.கடந்த 2011-12ம் நிதியாண்டில், 3.52 கோடி பருத்தி பொதிகள் (ஒரு பொதி-170 கிலோ), உற்பத்தி செய்யப்பட்டன. இது, சென்ற, 2012-13ம் நிதி ஆண்டில், 3.40 கோடி பொதிகளாக குறைந்திருந்தது.நடப்பு ஆகஸ்ட் 2ம் தேதி நிலவரப்படி, நாட்டில், பருத்தி பயிரிடும் பரப்பளவு, 1.09 கோடி ஹெக்டேராக (2.69 கோடி ஏக்கர்) உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 1.01 கோடி ஹெக்டேராக இருந்தது.அதிக மழை பொழிவால், மிகச் சிறிய அளவில் தான் பருத்தி பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 1994ம் ஆண்டு முதல் பருத்தி உற்பத்தி அதிகரித்து வருகிறது. அவ்வாண்டில், முந்தைய 50 ஆண்டுகளின் சராசரி அளவை விட, கூடுதலாக 15 சதவீதம் மழை பொழிவு இருந்தது. இதனால், பருத்தி உற்பத்தி சிறப்பாக இருந்தது.இதனால், கவரப்பட்ட நெல் விவசாயிகள், பருத்தி மற்றும் கரும்பு பயிருக்கு மாறினர். நாட்டில் பருத்தி உற்பத்தி அதிகரித்தது. இதன் விளைவாக, உலகளவில் மிக அதிகமாக பருத்தியை உற்பத்தி செய்யும் நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. மேலும், தொடர்ந்து, இந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)