பதிவு செய்த நாள்
17 ஆக2013
14:12
மதுரை: "தமிழகத்தில், "ஆன்லைன்' மூலம் வருமான வரித்தாக்கல் 60 சதவீதம் உயர்ந்துள்ளது,'' என, சென்னை வருமான வரித்துறை கமிஷனர் அருண் சி.பரத் தெரிவித்தார்.
மதுரையில், அகில இந்திய தொழில்முறை மதிப்பீட்டாளர்கள் சங்கம் சார்பில் நடந்த சிறப்பு பயிலரங்கை துவக்கி வைத்து, அவர் பேசியதாவது: தமிழகத்தில், "ஆன்லைன்' மூலம் வருமான வரித்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை, இந்தாண்டு 60 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு, மதிப்பீட்டாளர்கள் சங்கமும் ஒரு காரணம். சொத்துக்கள் பதிவு செய்வதற்கான "கைடுலைன்' மதிப்பீட்டை தமிழகத்தில் உயர்த்தியதன் மூலம் வருமான வரித்துறைக்கு லாபம் அதிகரித்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் "ரியல் எஸ்டேட்' பதிவுகள் குறைந்துள்ளன. மதுரையில் திருமலை நாயக்கர் மகால், மீனாட்சி அம்மன் கோயில் உட்பட கலாசாரம் சார்ந்த இடங்களையும், மதிப்பீட்டாளர்கள் மதிப்பீடு செய்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார். பயிலரங்கிற்கு சங்க அகில இந்திய தலைவர் மகரந்த்கோட்போலே தலைமை வகித்தார். செயலாளர் மாதவ் ஹூண்டேக்கர், தமிழக ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, பொறுப்பாளர் வக்கீல் செல்வதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|