பதிவு செய்த நாள்
21 ஆக2013
00:06
மும்பை: வரும் 2013-14ம்சந்தைப்படுத்தும் பருவத்தில், நாட்டின் சோயா உற்பத்தி, 18சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.33 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய பருவத்தில், 1.13 கோடி டன்னாக இருந்தது.
மத்திய வேளாண் அமைச்சக புள்ளிவிவரத்தின்படி, ஆகஸ்ட் 15ம் தேதி வரையிலான காலத்தில், சோயா பயிரிடும் பரப்பு, 1.21 கோடி ஹெக்டேராக உயர்ந்து உள்ளது. இது, கடந்தாண்டு இதே காலத்தில், 1.06 கோடி ஹெக்டேராக இருந்தது.இது மட்டுமின்றி, நிலக்கடலை பயிரிடும் பரப்பும், 34.30 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 40 லட்சம் ஹெக்டேராக வளர்ச்சி கண்டுள்ளது.
முக்கிய எண்ணெய்வித்துக்கள்சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளதையடுத்து, நடப்பாண்டு நவம்பர் முதல் துவங்கும், எதிர்வரும்சந்தைப்படுத்தும் பருவத்தில், நாட்டின்சமையல் எண்ணெய்இறக்குமதி வெகுவாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அது மட்டுமின்றி, இதர ஆசிய நாடுகளுக்கு, சோயா புண்ணாக்கு ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் சோயா பயிரிடும் பரப்பளவு சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது. இதையடுத்து, நாட்டின் சோயா உற்பத்தி, கூடுதலாக, 15-20 லட்சம் டன் அதிகரிக்கும் என, இந்திய எண்ணெய்உற்பத்தியாளர்கள்சங்கத்தின் செயல் இயக்குனர் பீ.வி.மேத்தா தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|