பதிவு செய்த நாள்
24 ஆக2013
01:04
புதுடில்லி:மகளிர் பாதுகாப்பு நிதியம் அமைப்பது உட்பட, 7,500கோடி ரூபாய்க்கு, கூடுதல் செலவினங்களுக்கான துணை மானியக்கோரிக்கையை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பார்லிமென்டில் தாக்கல் செய்தார்.அந்த அறிக்கை விவரம்:மகளிர் பாதுகாப்பிற்கான "நிர்பயா நிதியம்' அமைக்கும் திட்டத்திற்கு, 1,000கோடி ரூபாயும், அனைத்து மகளிர் வங்கி துவங்க, அதே அளவிலான தொகையும் ஒதுக்கீடு செய்யப்படும்.
சர்வதேச நிதியத்திற்கு, இந்தியாவின் பங்களிப்பாக, 1,830கோடி ரூபாய் வழங்கப்படும். இந்திய சிறுதொழில்மேம்பாட்டு வங்கி (சிட்பி)க்கு, கடன் உறுதி நிதியம் (சி.ஜி.எப்.,) அமைக்க, 500கோடி ரூபாயும், அதன் இந்திய நுண்கடன் பங்கு நிதியத்திற்கு, 100கோடி ரூபாயும் வழங்கப்படும்.அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு, தலா, 100கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். ராஜிவ் காந்தி பஞ்சாயத்து சாஷக்திகரன் அபியான் திட்டத்திற்கு, 200கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
முதற்கட்டத்தில், கூடுதல் செலவினங்களுக்கான, துணை மானியக்கோரிக்கை, 7,372.55கோடி ரூபாயாகும். எனினும், இதில், நிகர ரொக்க செலவினம், 127.14கோடி ரூபாய் என்ற அளவிற்கே இருக்கும்.எஞ்சிய தொகை, அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின்சேமிப்பின் மூலம் ஈடு செய்யப்படும். அதனால், இந்த ஒதுக்கீடு, ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை இலக்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|