பதிவு செய்த நாள்
26 ஆக2013
12:08
சென்னை : பாமாயில், சூரியகாந்தி எண்ணெய்களின் விலை திடீரென, லிட்டருக்கு, 5 ரூபாய் வரை அதிகரித்து உள்ளது. அத்யாவசியப் பொருட்களின் விலை ஓரளவு கட்டுக்குள் இருந்து வருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில், காய்கறிகளின் விலை, கடந்த மாதத்தில் வெகுவாக அதிகரித்தது. இதுவும் தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. வெங்காயத்தின் விலையில் மற்றும் குறைவு காணப்படவில்லை. இந்த நிலையில், எண்ணெய் வகைகளில், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய்களின் விலை, திடீரென அதிகரித்து உள்ளது. கடந்த வாரம், 900 ரூபாயாக இருந்த, 15 லிட்டர் பாமாயில் டின்னின் விலை, நேற்று, 945 ரூபாயாகவும், 15 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை, 1,250 ரூபாயிலிருந்து, 1,300 ரூபாயாகவும் உயர்ந்து உள்ளது.சில்லரையில், 58 ரூபாயாக இருந்த, 1 லிட்டர் பாமாயில், 63, 64 ரூபாய்க்கும், 86 ரூபாய்க்கு விற்ற சூரியகாந்தி எண்ணெய், 1 லிட்டர், 91 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர், எஸ்.பி.சொரூபன் கூறியதாவது: பாமாயில், இந்தோனேசியா, மலேசியாவிலிருதும், சூரியகாந்தி எண்ணெய், தென்அமெரிக்க, ரஷ்யா, உக்ரேனிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், இறுக்குமதியாகும் இவ்விரு எண்ணெய் வகைகளின் விலை உயர்ந்துள்ளது. மத்திய அரசு கவனம் செலுத்தாவிட்டால், மற்ற அத்தியாவசிப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|