தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்ததுதங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்தது ... ஹெல்மெட் தயாரிப்பில் டைட்டான் ஹெல்மெட் தயாரிப்பில் டைட்டான் ...
உருக்கு பொருள்களின் விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2013
14:56

மும்பை: ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால் இறக்குமதி பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உருக்கு நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளில் கோக்கிங் கோல் எனப்படும் உயர்தர நிலக்கரியை முக்கிய எரிபொருளாக பயன்படுத்துகின்றன. இந்த நிலக்கரியை இறக்குமதி செய்வதில் தற்போது ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினத்தை நுகர்வோர் மீதுதான் சுமத்த வேண்டிய நிலையில் நிறுவனங்கள் உள்ளன. அதே சமயம், உருக்குப் பொருள்களுக்கான தேவைப்பாடு இப்போது சற்றே குறைந்துள்ளதால் முழு சுமையையும் நுகர்வோர் தலையில் வைக்க முடியாத நிலைமை உள்ளது. ‘ரூபாய் மதிப்பு சரிவால் ஒரு டன் உயர்தர நிலக்கரியை இறக்குமதி செய்வதில் ரூ.1000 அதிகரித்துள்ளது. எனினும் இந்த செலவு முழுவதையும் நுகர்வோர் மீது சுமத்த முடியாது. ஏனென்றால் உருக்குப் பொருள்களுக்கான தேவை குறைந்துள்ளது’’ என ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் உலோகம் மற்றும் சுரங்கப் பிரிவு ஆய்வாளர் பவேஷ் சவான் தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) 1.78 கோடி டன் அளவிற்கு உருக்குப் பொருள்கள் விற்பனையாகியுள்ளன. சென்ற ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது விற்பனை 0.2 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. மோட்டார் வாகனங்கள் விற்பனை சரிவடைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். சென்ற நிதி ஆண்டிலும் (2012–13) உருக்குப் பொருள்கள் விற்பனை 3.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டிருந்தது. இது, அந்த ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 8 சதவீதத்தை விட மிகவும் குறைவாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)