பதிவு செய்த நாள்
13 செப்2013
15:43
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஓணத்திற்காக, கேரள வியாபாரிகள் காய்கறிகளை வாங்க துவங்கியதால் முருங்கை, வெண்டை கிலோவிற்கு 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வரும் திங்கள் கிழமை ஓணம் பண்டிகை.. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கேரள வியாபாரிகள் முருங்கை, வெண்டை உள்ளிட்ட காய்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். இதனால் இவற்றின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூபாய்12 க்கு விற்ற முருங்கை நேற்று ரூபாய் 23க்கும், 9 ரூபாய்க்கு விற்ற வெண்டைக்காய் 19 க்கும் விற்றது. கமிஷன் கடை உரிமையாளர் ஹரிகரன் கூறுகையில், "ஓணம் பண்டிகைக்காக, கேரள வியாபாரிகள் சில நாட்கள் முன்பிருந்தே காய்கறிகளை வாங்க துவங்கியுள்ளனர், உள்ளூர் வரத்து இல்லாததால் கம்பம், தேனி பகுதிகளில் இருந்து வெண்டைக்காய் வாங்கப்பட்டு இங்கு விற்கப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு காய்கறி வரத்து குறைவாகத்தான் உள்ளது,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|