தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு ... உணவுப்பொருள் விலை:157% உயர்வு உணவுப்பொருள் விலை:157% உயர்வு ...
புதிய நிதிக்கொள்கை அறிவிப்பு: பங்குச்சந்தையில் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2013
13:01

புதுடில்லி : இன்றைய நிதிக்கொள்கை அறிவிப்பை அடுத்து பங்குச்சந்தை 500 புள்ளிகளை தாண்டி சரிவை சந்தித்தது. ஆனால் வங்கி கடனுக்கான வட்டி விகிதம் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தற்போதைய பணவீக்க அழுத்தம் காரணமாகவே இந்த முடிவு எடுத்துள்ளதாகவும், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பொறுப்பேற்றிருக்கும் ரகுராம் ராஜன் இன்று தனது முதல் மத்திய காலாண்டிற்கான பணக்கொள்கையை வெளியிட்டார். இதில் பண மதிப்பை உயர்த்தும் அதிரடி நடவடிக்கையாக யாரும் எதிர்பாராத விதமாக ரிப்போ விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி உள்ளார். இதன் மூலம் ரிப்போ விகிதம் 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும் எம்.எஸ்.எப்., எனப்படும் வங்கிகளின் வட்டிவிகிதத்தையும் 0.75 சதவீதம் குறைத்துள்ளது, ரிசர்வ் வங்கி. இதன்படி வங்கிகளின் வட்டிவிகிதம் 9.5 சதவீதமாக மாறி உள்ளது. பண இருப்பு விகிதத்தை பாதுகாப்பதற்காக தினசரி பணப்புழக்கத்திற்கான குறைந்தபட்ச விகிதம் 99 சதவீதத்தில் இருந்து 95 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரகுராம் ராஜன் கூறுகையில்: நாட்டின் பணவீக்கம் கவலை அளிக்கிறது. பண மதிப்பு சரிவு என்பது எண்ணெய் விலை அடிப்படையில் மாற்றம் பெறுகிறது.நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ளது; அதை வளர்ச்சி பாதையில் உள்ள முடக்கங்களை சரிசெய்ய திட்டங்கள் துவங்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். கொள்கையை அறிவித்த சில நிமிடங்களில் மும்பை பங்குச்சந்தை 529 புள்ளிகள் சரிந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)