பதிவு செய்த நாள்
28 செப்2013
01:50
புதுடில்லி:அக்டோபர் 1ம் தேதி முதல், ரயில்வே சரக்கு கட்டணம், 15 சதவீதம் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் அதிகரிப்பு, எரிபொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால், உணவு தானியங்கள், சிமென்ட், ரசாயன உரங்கள், இரும்பு தாது, நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான சரக்கு கட்டணத்தை, ரயில்வே துறை, உயர்த்த இருப்பதாக தெரியவந்துள்ளது.
பொதுவாக, அக்டோபர் முதல், ஜூன் மாதம் வரை, சரக்கு போக்குவரத்து அதிகமாக இருக்கும் காலமாக கருதப் படுகி றது. இக்காலத்தில், சரக்கு கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக, ரயில்வே துறையின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள் ளது.அதேசமயம், இக்காலத்தில், சரக்கு பெட்டகங்கள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு சரக்கு கட்டண உயர்வி லிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளது. என்றாலும், பார்லிமென்ட் தேர்தல் வரவுள்ள நிலையில், பயணிகளுக்கான கட்டணம், உயர்த்தப்படாது என, எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று, உணவு பொருட்களுக்கான சரக்கு கட்டணமும், உயர்த்தப்படாது என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|