பதிவு செய்த நாள்
28 செப்2013
02:22
மும்பை:உள்நாட்டில், தங்கத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவு செய்ய, ஆபரண தயாரிப்பாளர்களின் கவனம், பழைய தங்கத்தின் மீது திரும்பத் துவங்கியுள்ளது என, ஆய்வு நிறுவனமான, இக்ரா தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து, ஏற்றுமதி செய்யப்படும் தங்க ஆபரணங்களுடன் ஒப்பிடுகையில், இறக்குமதியாகும் தங்கத்தின் அளவு, மிகவும் குறைவாக உள்ளது. இது, உள்நாட்டில், தங்கத்திற்கான சப்ளையில், மிகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
பண்டிகை காலம்:நடப்பாண்டின், இரண்டாவது அரையாண்டில், பண்டிகை மற்றும் திருமண சீசன்கள் அதிகளவில் வரவிருப்பதால், தங்கத்திற்கான தேவை, மிகவும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், உள்நாட்டில், தங்கம் சப்ளை குறைந்துள்ளதால், நகை தயாரிப்பாளர்கள், பழைய தங்கத்தை வாங்கி, புதிய ஆபரணங்களை உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளனர் என, ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.சென்ற 2012 – 13ம் நிதியாண்டின், நான்காம் காலாண்டிலும், நடப்பு 2013 – 14ம் நிதியாண்டின் முதல் காலாண்டிலும், தங்கம் விலை வீழ்ச்சியால், பெரும்பாலான ஆபரண நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
செய்கூலி:இந்த இழப்பை, தற்போதைய தங்கம் விலை உயர்வு ஓர் அளவிற்கு ஈடு செய்யும். மேலும், தங்க நகைகளுக்கான செய்கூலியை உயர்த்துவதன் மூலமும், ஆபரண நிறுவனங்கள், முந்தைய இழப்பை சரி செய்து கொள்ள வாய்ப்புள்ளது. இருந்தபோதிலும், இந்நிறுவனங்களின் லாபம், கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டு குறைவாகவே இருக்கும் என, இக்ராநிறுவனத்தின் ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|