பதிவு செய்த நாள்
28 செப்2013
13:38
மதுரை: "கூட்டுறவு வீட்டுவசதிக் கடன்களை, செப்.,30க்குள் செலுத்தினால், வட்டி சலுகையைப் பெறலாம்,'' என, மாநில கூட்டுறவு வீட்டுவசதி இணையத் தலைவர் சக்திவேல் முருகன் தெரிவித்தார். மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் செயல்படும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம், மதுரையில் நடந்தது. 173 கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளர்கள் பங்கேற்றனர்.
சக்திவேல் முருகன் பேசியதாவது: உறுப்பினர்கள் காலதாமதம் செய்யாமல் செப்.,30க்குள் தவணைத் தொகையை செலுத்தி, சலுகை பெறலாம். மதுரை மண்டலத்தில் ரூ.215 கோடி, விருதுநகர் மண்டலத்தில் ரூ.64 கோடி வலாக வேண்டியுள்ளது. சங்கப் பணியாளர்கள், கடன் வலில் ஈடுபட்டு, 75 சதவீதத்தொகையை வல் செய்ய வேண்டும். ஏற்கனவே, 60 சதவீதம் வரை தவணைத் தொகை செலுத்திய அனைத்து சங்கங்களுக்கும் புதிய கடன்கள், நகைக்கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|