பதிவு செய்த நாள்
04 அக்2013
11:49
சென்னை: காதி கிராமோத்யோக் பவனில், காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி, சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கப்பட்டு உள்ளது. சென்னை, அண்ணா சாலையில் உள்ள, காதி கிராமோத்யோக் பவனில் நடந்த, தள்ளுபடி விற்பனை துவக்க விழாவிற்கு, கதர் துறை அமைச்சர் பூனாட்சி, தலைமை தாங்கினார். கவர்னர் ரோசய்யா, சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார். மேலும், ஆதரவற்ற ஆசிரம குழந்தைகளுக்கு, இலவச ஆடை வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினார். முதல் விற்பனையை, அகில இந்திய சாய் சமாஜ் தலைவர் தங்கராஜ், செயலர் செல்வராஜ், ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நேற்று முன்தினம் முதல், நவ., 1ம் தேதி வரை, தமிழக கதர் ரகங்களுக்கு, 20 சதவீதம், வெளி மாநில கதர் ரகங்களுக்கு, 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|