பதிவு செய்த நாள்
11 அக்2013
01:04
புதுடில்லி:நடப்பு, 2013 – 14ம் நிதிஆண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான, ஆறு மாத காலத்தில், நாட்டின் முன்பேர சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், 65.68 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
இது, கடந்த, 2012 – 13ம் நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை (87.62 லட்சம் கோடி ரூபாய்) விட, 25 சதவீதம் குறைவாகும் என, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) வெளியிட்டுஉள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கணக்கீட்டு காலத்தில், வேளாண் விளைபொருட்கள், தங்கம், வெள்ளி, உலோகம் மற்றும் எரிசக்தி போன்றவற்றின் மீதான வர்த்தகம் வெகுவாக குறைந்துள்ளது.நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், வேளாண் விளைபொருட்கள் மீதான வர்த்தகம், 37.16 சதவீதம் சரிவடைந்து, 11.89 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 7.47 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டு உள்ளது.
இதே போன்று, தங்கம், வெள்ளி மீதான வர்த்தகம், 27 சதவீதம் குறைந்து, 40.61 லட்சம் கோடியில் இருந்து, 29.62 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது. இதர உலோகங்கள் மீதான முன்பேர வர்த்தகம், 24 சதவீதம் குறைந்து, 16.09 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 12.20 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான வர்த்தகம், 14 சதவீதம் சரிவடைந்து, 19.02 லட்சம் கோடியிலிருந்து, 16.27 லட்சம் கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.தற்போது, உள்நாட்டில், 21 முன்பேர சந்தைகள் உள்ளன. இவற்றுள் தேசிய அளவில், 6 முன்பேர சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|