பதிவு செய்த நாள்
14 அக்2013
10:35
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 4.62 புள்ளிகள் அதிகரித்து 20533.21 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 3.20 புள்ளிகள் குறைந்து 6093.00 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளியன்று நன்கு இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 255.68 புள்ளிகள் அதிகரித்து, 20,528.59 புள்ளிகளில் நிலைகொண்டது.வர்த்தகத்தின் இடையே இப்பங்குச்சந்தையின் குறியீட்டுஎண், அதிகபட்சமாக, 20,559.69 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 20,368 புள்ளிகள் வரையிலும் சென்றது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 75.25 புள்ளிகள் உயர்ந்து, 6,096.20 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,107.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,046.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|