பதிவு செய்த நாள்
25 அக்2013
11:08
மும்பை: ஆதார் அட்டை இருந்தால் போதும், வங்கியில் கணக்கு துவக்க, எவ்வித விண்ணப்ப படிவங்களையும் நிரப்ப தேவையில்லை,'' என, ஆதார் அடையாள அட்டை வழங்கும் அமைப்பின் தலைவர், நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று கூறியதாவது: ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், வங்கிகளில் கணக்கு துவக்க, விண்ணப்ப படிவம் எதையும் நிரப்பத் தேவையில்லை. வங்கிக்கு சென்று, அங்குள்ள கம்ப்யூட்டரில், ஆதார் அடையாள அட்டையை சொருகினால் போதும்; அதில் உள்ள தகவல்கள் அனைத்தும், வங்கிக் கணக்கு துவக்கும் பிரிவுக்கு மாறிவிடும்.எனினும், அடையாளத்தை உறுதி செய்வதற்காக, விண்ணப்பதாரர், தன் கைரேகையை பதிவு செய்வது கட்டாயமாக இருக்கும். அட்டை வைத்திருப்பவர் தொடர்பான அனைத்து தகவலும், அந்த அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதால், கூடுதலாக எதையும் தர வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|