பதிவு செய்த நாள்
29 அக்2013
11:48
மும்பை : ரெப்போ எனப்படும் வங்கிகளின் குறுகியகால வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதேசமயம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்துள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கியின் மாதாந்திர கடன் வெளியீட்டு கொள்கை இன்று வெளியிடப்பட்டது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் இதனை வெளியிட்டார். அதில் ரெப்போ வட்டி விகிதத்தை 7.50 சதவீதத்தில் இருந்து 7.75 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார்.
அதேசமயம் எம்.எஸ்.எப். வட்டியை 9 சதவீதத்தில் இருந்து 8.75 சதவீதமாக குறைத்துள்ளதாகவும், சி.ஆர்.ஆர். எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 4 சதவீதமே தொடரும் என கூறினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி தற்போது 5.5 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை 5 சதவீதமாக குறைத்துள்ளதாகவும், சில்லரை வர்த்தக பணவீக்கம் 9 சதவீதம் என்ற நிலையிலேயே தொடரும் எனவும், நாட்டின் மொத்த பணவீ்க்கம் தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் அதை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் ஏற்றுமதி மற்றும் விவசாயத்தில் நல்ல ஏற்றம் காணப்படும் என்றும் ரகுராம் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் கடன் வட்டி உயர்வால் கார், வீடு போன்றவைகளின் கடன் வட்டி விகிதங்கள் உயர இருக்கிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|